மேற்கு நுசா தெங்காரா
மேற்கு நுசா தெங்காரா; (ஆங்கிலம்: West Nusa Tenggara; இந்தோனேசியம்: Nusa Tenggara Barat) என்பது இந்தோனேசியா, சுண்டா தீவுகளில் உள்ள ஒரு மாநிலம்; இதன் தலைநகரம் மாதரம். இது சுண்டா தீவுகளின் மேற்குப் பகுதியை உள்ளடக்கியது. ஆனால் அதில் பாலி சேர்க்கப்படவில்லை. ஏனெனில் பாலி என்பது தனி ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் பரப்பளவு 19,675.89 கிமீ2 (7,596.90 சதுர மைல்) ஆகும். இது இரண்டு முக்கிய தீவுகளைக் கொண்டுள்ளது; அதாவது லோம்போக் தீவு; சும்பாவா தீவு; மற்றும் பல சிறிய தீவுகள்.[6] இந்த மாநிலத்தில் உள்ள இரண்டு தீவுகள்; மேற்கில் அதிக மக்கள் தொகை கொண்ட லோம்போக் தீவு; கிழக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சும்பாவா தீவு ஆகும். லோம்போக்கில் உள்ள மாதரம், மாநிலத்தின் தலைநகரம்; மற்றும் மிகப்பெரிய நகரமாகும். இந்த மாநிலம் மேற்கில் பாலி தீவுடனும், கிழக்கில் கிழக்கு நுசா தெங்காராவுடனும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. புவியியல்புவியியல் ரீதியாக, மேற்கு நுசா தெங்காரா மாநிலம், குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு லோம்போக்கில் ஒரு தட்டையான கடற்கரைப் பகுதியாகவும்; மாநிலத்தின் மிக உயரமான மலையான 3,726 மீட்டர் உயரமுள்ள ரிஞ்சனி மலையை உள்ளடக்கிய ஒரு மலைப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ரிஞ்சனி மலை ஒரு செயல்நிலை எரிமலையாகவும், மிகவும் பிரபலமான இயற்கைச் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. சும்பாவா தீவில், அதன் நிலப்பரப்பு மிகவும் மாறுபட்டது; செங்குத்தான மலைகளும் மற்றும் கிழக்கில் வறண்ட புல்வெளிகளும் உள்ளன.[7] உள்ளூர் பழக்கவழக்கங்கள்இந்த மாநிலம் சுமார் 5.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கடலோரப் பகுதிகளிலும், லோம்போக் தீவில் அமைந்துள்ள மாகாணத் தலைநகரான மாதரம் போன்ற பெரிய நகரங்களிலும் வாழ்கின்றனர்.[8] மேற்கு நுசா தெங்காரா மாநிலம், லோம்போக்கில் சசாக் கலாசாரத்திற்கும்; சும்பாவாவில் சமாவா மற்றும் எம்போஜோ கலாசாரத்திற்கும் பெயர் பெற்றது. இந்த இரு இடங்களும் இன்னும் தங்கள் உள்ளூர் பழக்கவழக்கங்களையும் கலைகளையும் பேணி வருகின்றன. பவளப்பாறைகள்![]() ![]() மேற்கு நுசா தெங்காரா மாநிலம் அதன் இயற்கை சூழலுக்கும் பெயர் பெற்றது. லோம்போக்கில் உள்ள கூத்தா கடற்கரை (Kuta Beach); மற்றும் சும்பாவாவில் உள்ள லேக்கி கடற்கரை (Lakey Beach) போன்ற இடங்களுக்குப் பிரபலமானது. லோம்போக் கடற்கரையில் அமைந்துள்ள கிலி தீவுகள் (Gili Islands), இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், அவை தெளிவான கடல் நீர் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றவை.[9] பீமா சுல்தானகம்கடற்கரை சுற்றுலாவைத் தவிர, மேற்கு நுசா தெங்காராவில் பாரம்பரிய சசாக் கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் இடங்களும் உள்ளன. லோம்போக்கில் சேட் கிராமம் (Sade Village), பண்பாட்டு வரலாற்றுத் தளமாக அறியப்படுகிறது. சும்பாவாவில் உள்ள பீமா சுல்தானகத்தின் (Bima Sultanate) பண்டைய அரண்மனைகளும் சேட் கிராமத்தில் உள்ளன.[10][11] காலநிலைகாலநிலையைப் பொறுத்தவரை, மேற்கு நுசா தெங்காரா இரண்டு முக்கிய பருவங்களைக் கொண்ட வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது; அதாவது நவம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் மழைக்கால;ம் மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வறண்ட காலம்.[12] அதன் புவியியல் அமைப்பின் காரணமாக, மேற்கு நுசா தெங்காராவின் பல பகுதிகள், குறிப்பாக சும்பாவாவின் கிழக்குப் பகுதி, குறைந்த மழைப்பொழிவுடன் நீண்ட வறண்ட காலத்தை அனுபவிக்கின்றன. எனவே இந்தப் பகுதி வறண்டதாகவும் தரிசாகவும் இருக்கின்றன. காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia