விசாகா வழிகாட்டுதல்கள்
![]() விசாகா வழிகாட்டுதல்கள் ( Vishakha Guidelines) என்பது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விசாகா எனும் பெண்ணின் வழக்கில்[1], இந்திய உச்சநீதிமன்றம், 1997 இல் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியியல் துன்புறத்தல்கள், வன்முறைகள், சீண்டல்களை தடுத்திட வேண்டி, பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களில் விசாகா குழு எனும் பெயரில் குழுக்கள் அமைத்திட வேண்டும் என ஆணையிட்டது.[2] இந்திய உச்சநீதிமன்றத்தின் விசாகா வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்திய அரசு 2013 இல் பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டத்தைக் கொண்டு வந்தது. பாலியல் தொல்லைகள் என்றால் என்னபாலியல் துன்புறுத்தல் என்பது வரவேற்கத் தகாத பாலியல் சார்ந்த நடத்தைகளும் உள்ளடக்கியது (நேரடியாகவோ அல்லது உட்குறிப்பாகவோ) அவைகள்:
எனவே, பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியான தொடர்பு இல்லை என அறிந்து கொள்ள வேண்டும். பரிந்துரைகள்தேசிய மகளிர் ஆணையம், விசாகா வழிகாட்டுதல்களின் படி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுத்திடக் குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்தியது.[3] பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 9 டிசம்பர் 2013 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.[4] இதனையும் காண்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia