நந்திவரம்-கூடுவாஞ்சேரி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது. 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது 12 செப்டம்பர் 2021 அன்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3] அமைவிடம்சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 23 கி.மீ.; மேற்கில் திருப்பெரும்புதூர் 28 கி.மீ.; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கி.மீ.; தெற்கில் மறைமலைநகர் 7 கி.மீ. தொலைவில் உள்ளன. நகராட்சியின் அமைப்பு8.50 ச.கி.மீ. பரப்பும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட நகராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். [4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 11,252 வீடுகள், மற்றும் 44,098 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது . மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia