ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமணத்தின் உட்பிரிவான திகம்பரப் பிரிவைச் சேர்ந்த ஆச்சாரியரான சமந்தபத்திரரரால் (பொ.ஊ. 2ம் நூற்றாண்டு) தொகுக்கப்பட்ட சமண நூலாகும். சமந்தபத்திரர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார். ரத்னகரந்த சிராவகாசாரம், காலத்தால் மிக முற்பட்டதும், நன்கறியப்பட்டதுமான சிராவகாசார நூலாகும்.
சிராவகாசாரம், சிராவகர் எனப்படும் சமண இல்லறத்தோர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விவரிக்கும் நூலாகும். ஈராலால் சாசுதிரி, பொ.ஊ. 2ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையான 29 இவ்வகை நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.[1]
மொழிபெ.- கர்ம அழுக்குகளின் மாசுகள் [அனைத்தையும்] தனது உயிரிலிருந்து கழுவியகற்றிய [மேலும்], மூன்று உலகங்களையும் முடிவில்லாத வெளியையும் ஒரு கண்ணாடியைப் போல் ஒளிரச் செய்த சிறீ வர்த்தமான மகாவீரரைப் பணிகிறேன்!
அத்தியாயங்கள்
ரத்னகரந்த சிராவகாசாரம் பின்வரும் ஏழு அத்தியாயங்கள் அல்லது பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
ரத்னகரந்த சிராவகாசாரம் ஆங்கில மொழியில், சம்பத் ராய் செயின் என்பவரால் 1917ல் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. இம் மொழிபெயர்ப்புக்கு, இல்லறத்தோரின் நெறி எனப் பொருள்படும் வகையில் "த அவுசுகோல்டர்சு தர்ம" எனப் பெயரிடப்பட்டது.
P. S. Jaini, Reviewed work(s): Jaina Yoga: A Survey of the Mediaeval Śrāvakācāras by R. Williams, Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol. 27, No. 3 (1964)
Jaina yoga: a survey of the mediaeval śrāvakācāras, Volume 1 of Lala Sunder Lal Jain research series, Author R. Williams, Edition 3, Publisher Motilal Banarsidass Publ., 1991
RATNAKARANDA SRAVAKACARA (Sanskrit-Hindi) By Acarya Samantbhadra Translated into Hindi with 2 Appendices by Dr. Jaykumar Jalaj Preface by Dr. Paul Dundas Pandit Nathuram Premi Research Series Volume 3
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.