இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன், இறைவிஇத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி. சிறப்புகள்இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பியை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.[1] வழிபட்டோர்இக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர். தேவாரப்பாடல்இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia