இந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2009)
![]() 2009ஆம் ஆண்டு சூலையில் இந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2009 India floods) நிகழ்ந்த பொழுது பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. ஒடிசாவில் குறைந்தது 36 பேரும் [1][2][3][4] கேரளாவில் 13 பேரும் இவ்வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தனர்[5]. கர்நாடகா, குசராத்து[6], மற்றும் வடகிழக்கு இந்திய[7] states. மாநிலங்கள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டன. கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் மட்டும், கடும் பருவ மழை ஏற்படுத்திய வெள்ளத்தில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர்[2]. அரை மில்லியன் வீடுகள் மூழ்கடிக்கப்பட்டன. இம்மாநிலத்தின் நயாகட் மாவட்டம் முற்றிலுமாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பின்னர் சூலை 13 ஆம் நாள் ஒரு பேருந்து சி்ற்றோடையில் விழுந்து ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி மேலும் பலர் காணாமல் போயினர்[8] . ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்திற்கு 87 கிலோமீட்டர் தொலைவில் நயாகட் நகரம் அமைந்துள்ளது. கொனார்க் நகரில் அமைந்துள்ள சூரியனார் கோவிலும் தண்ணீரால் சூழப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் இடர்பாடுகளை உண்டாக்கியது[9] . நயாகட் மாவட்டம், கட்டக் மாவட்டம், கஞ்சாம் மாவட்டம்[10], கேந்துஜர் மாவட்டம், கோராபுட் மாவட்டம் மற்றும் கந்தமாள் மாவட்டம் முதலிய ஒடிசாவின் மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டன[1] கடுமையாகப் பெய்த பெருமழையால் கேரளாவிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அழிந்தன. குறைந்தது 13 பேராவது இப்பெருவெள்ளத்தால் உயிரிழந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன[11]. கண்ணூர் மாவட்டம்[12], எர்ணாகுளம் மாவட்டம்[13], கோழிக்கோடு மாவட்டம்[14] , கொல்லம் மாவட்டம்[15] , திருச்சூர் மாவட்டம்[16], மலப்புறம் மாவட்டம், காசர்கோடு மாவட்டம் மற்றும் ஆலப்புழா மாவட்டம் முதலிய கேரளாவின் மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்டன[17]. மாநிலம் முழுவதும் பல்வேறு துயர் துடைப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன[13]. கேரள மாநில வருவாய்த் துறை அமைச்சர், பி ராசேந்திரன், மழை காரணமாக ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய 20 ஜூலை 2009 அன்று கோழிக்கோட்டில் ஒரு கூட்டத்தை கூட்டினார், மாவட்ட ஆட்சித்தலைவரும், காசர்கோடு, வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அரசுத் துறை அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்[18]. அசாமிலும் இந்தியாவின் பிற வடகிழக்கு மாநிலங்களிலும் பெய்த இடைவிடாத மழையால் மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்[19]. தலைநகரம் தில்லி நகருக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்டா நகரத்தில், சூலை 29 அன்று பெய்த கடும் மழையால் ஒரு சுவர் இடிந்து நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 10 பேர், கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்[20]. இறப்பும் இழப்பும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia