ஏலகிரி விரைவுத் தொடருந்து

ஏலகிரி விரைவுத் தொடருந்து (Yelagiri express) ஜோலார்பேட்டை, சென்னை இரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஒரு தினசரி தொடர்வண்டியாகும் [1][2]. வாணியம்பாடி, ஆம்பூர், மேல்பட்டி, வளத்தூர், குடியாத்தம், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாசா சாலை, சோளிங்கர், அன்வர்த்திகான்பேட்டை, சித்தேரி, அரக்கோணம் சந்திப்பு, திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர், சென்னை சென்ட்ரல் ஆகிய இடங்களில் இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது.

ஏலகிரி விரைவுவண்டி

சார்புத் தகவல்

ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி மலைக்கு அருகே இருந்து இத்தொடருந்து புறப்படுவதால் ஏலகிரி விரைவுத் தொடருந்து என்பதை தன் பெயராகக் கொண்டுள்ளது. ஜோலார்பேட்டை ஏலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஏலகிரி விரைவுத் தொடருந்து இப்பகுதி மக்களால் சுருக்கமாக ஜே.பி என்றழைக்கப்படுகிறது.

கூட்டமைவு

இந்த இரயில் பொதுவாக சக்தி வாய்ந்த அரக்கோணம் டபிள்யூ.ஏ.பி 4 இயந்திரத்தால் இழுக்கப்படுகிறது. இவ்வண்டியின் மொத்தமுள்ள 24 பெட்டிகளில் 20 பெட்டிகள் பொதுவான இரண்டாம் வகுப்புப் பெட்டிகளாகவும், 2 முதல் வகுப்புப் பெட்டிகளாகவும், 2 பெட்டிகள் சுமப்பு மற்றும் தடையுந்துப் பெட்டிகளாகவும் பிரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று பெட்டிகள் பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சேவை

இந்தத் தொடருந்து விரைவுத் தொடருந்து என வகைப்படுத்தியிருந்தாலும் பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது. சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:10 மணிக்கு வந்து சேரும் இந்த இரயில் மாலையில் மீண்டும் 17:55 மணிக்கு புறப்படுகிறது.[3]

சான்றுகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya