சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவுத் தொடருந்து
சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி (Chennai–Thiruvananthapuram Superfast Express) கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கும் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கும் இடையில் பயணிக்கும் ஓர் அதிவிரைவு இரயில் ஆகும். 12695/12696 என்ற எண்களுடன் இந்த இரயில் இயங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இரயில் தினந்தோறும் சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்கிறது.[2] பெட்டிகள்சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டியில் மணிக்கு 110 கிலோமீட்டர் (மணிக்கு 68 மைல்) அதிகபட்ச வேகம் செல்லக்கூடிய வகையில் நிலையான இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின் பெட்டிகள் உள்ளன. மொத்தமாக இந்த இரயில் 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான இரயில் சேவைகளைப் போலவே, தேவையைப் பொறுத்து இந்திய ரயில்வே விருப்பப்படி இரயில் பெட்டிகளின் அமைப்பு திருத்தப்படும் வசதியும் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. நேரம்சென்னை மத்திய தொடருந்து நிலையம் (15:25 பிற்பகல்) → திருவனந்தபுரம் சென்ட்ரல் (07:35 முற்பகல்) திருவனந்தபுரம் சென்ட்ரல் (17:20 பிற்பகல்) → சென்னை மத்திய தொடருந்து நிலையம் (10:00 முற்பகல்) முக்கிய நிறுத்தங்கள் :-
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia