ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜோலார்பேட்டை சந்திப்பு (Jolarpettai Junction railway station)[1] (நிலையக் குறியீடு: JTJ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். ஜோலார்பேட்டை சந்திப்பு சென்னை மத்திய தொடருந்து நிலையம்-பெங்களூரு நகரத் தொடருந்து பாதையில் பங்காரப்பேட்டை சந்திப்பு வழியாகச் செல்லும் பாதையில் உள்ளது. இதன் வழியாக கிருஷ்ணராஜபுரம் மற்றும் ஜோலார்பேட்டை-சொரனூர் வழியாகச் சேலம், ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு வழியாகக் கேரளா செல்லும் பாதையில் உள்ளது. எனவே சென்னையிலிருந்து மங்களூருக்கு சொரனூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் வழியாக இணைக்கிறது. திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் வழியாகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தொடருந்துகள் இதன் வழியே செல்கிறது.[2] தடங்கள்கள்
தொடருந்துகள்சுமார் 190 தொடருந்துகள் இங்கு நின்று சேலம் சந்திப்பு, பெங்களூர் நகரம் மற்றும் காட்பாடி சந்திப்புக்குச் செல்கின்றன.[3] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12][13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia