கமுந்திங் தடுப்பு மையம்
கமுந்திங் தடுப்பு மையம் (ஆங்கிலம்: Kamunting Detention Centre (KEMTA); மலாய்: Kem Tahanan Perlindungan Kamunting; சீனம்: 甘文丁拘留中心) என்பது மலேசியா, பேராக், கமுந்திங், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மையம் ஆகும். இதனை கமுந்திங் சிறை முகாம் என அழைப்பதும் உண்டு.[1] இந்த மையம் 93.3 எக்டர் பரப்பளவைக் கொண்டது. தைப்பிங் நகரில் இருந்து ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவிலும், கமுந்திங் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act Malaysia) கீழ் கைது செய்யப்பட்ட நபர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அரசாங்கம் இந்தத் தடுப்பு மையத்தைப் பயன்படுத்துகிறது.[2]
பொதுஇந்த தடுப்பு மையம், மலேசியாவின் மிகைத் தடுப்பு சிறை (Malaysia's Supermax Prison) அல்லது அதிகபட்ச பாதுகாப்புச் சிறை (Maximum Security Prison) என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் மலேசிய அதிகாரிகள் அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் தளம் என்றும் கூறப்படுகிறது.[3] மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பரவலான பயன்பாட்டைத் தூண்டிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் 1987-இல் லாலாங் நடவடிக்கை (Operation Lalang); மற்றும் 1999-இல் சீர்திருத்த இயக்கம் (Reformasi Movement) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[4] அல்-அர்க்காம் அல்-மவுனா குழுக்கள்பயங்கரவாதிகள் மற்றும் தவறான வழிபாட்டு முறைகள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அறியப்பட்ட தனி நபர்களையும்; குழுக்களையும் தடுத்து வைப்பதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க குழுக்களில் அல்-அர்க்காம் (Al-Arqam) குழு மற்றும் அல்-மவுனா (Al-Ma'unah) பயங்கரவாதக் குழுவும் அடங்கும். முக்கிய நபர்கள்
மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia