தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை
தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (மலாய்: Jabatan Perlindungan Hidupan Liar dan Taman Negara Semenanjung Malaysia; (PERHILITAN); ஆங்கிலம்: Department of Wildlife and National Parks of Peninsular Malaysia); என்பது மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சின் (Ministry of Natural Resources, Climate Change and Environment of Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[2] இந்தத் துறை தீபகற்ப மலேசியாவில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்களின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு (Protection, Management and Preservation of Wildlife and National Parks) பொறுப்பு வகிக்கிறது. பொதுவனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-இன் கீழ் (Wildlife Protection Act, 1972) இத்துறை நிறுவப்பட்டது. இது தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநில வனவிலங்கு துறைகளையும் (Game Departments) ஒருங்கிணைக்கிறது. 2006-ஆம் ஆண்டு முதல், இத்துறையானது மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சில்; ஒரு தலைமை இயக்குனரின் தலைமையில் கீழ் செயல்படுகிறது. சபா மாநிலத்தில் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை என்பது சபா வனவிலங்கு துறை (Sabah Wildlife Department) மற்றும் சபா பூங்காக்கள் (Sabah Parks) ஆகிய இரு துறைகளின் கீழ் உள்ளது; சரவாக் மாநிலத்தில், இத்துறை சரவாக் வனக் கழகத்தின் (Sarawak Forest Corporation) கீழ் உள்ளது.[3] மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia