கட்டுரை, கவிதை, புனைகதை, நாடகம், ஆங்கிலப் படைப்புகள் மற்றும் பிற மாநில மொழி ஆகிய 6 பிரிவுகளில் அளிக்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ள (பபாசி) அறக்கட்டளையின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குச் சிறந்த முறையில் பங்களிக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கொருமுறை அளிக்கப்படும் விருதாகும்.
அமைப்பு
2007 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 30 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கிய ரூபாய் ஒரு கோடியில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]அந்த அறக்கட்டளையின் பெயரில் ஒரு கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வங்கி வட்டி வருமானம் மூலம் வருடம் தோறும் தமிழ் எழுத்தாளர்கள் நான்கு பேர், பிற இந்திய மொழிகளுக்கான எழுத்தாளர் ஒருவர், ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஒருவர் என மொத்தம் ஆறு எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. 2008 ம் ஆண்டு முதல் இவ்விருது அளிக்கப்படுகிறது.[சான்று தேவை]
2009 ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள்
2009 ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள்.
[1]