மித்திரவிந்தை![]() மித்திரவிந்தை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஐந்தாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]
வாழ்க்கைபாகவதம், இவள் குந்தியின் தமக்கை இராசாத்தி தேவி்யினதும், அவந்தி நாட்டரசன் ஜெயசேனனதும் மகள் என்கின்றது. இவளது தமையர்களான விந்தன், அனுவிந்தன் துரியோதனனின் தோழர்கள் என்றும் அது சொல்கின்றது.[2][3] விஷ்ணு புராணத்தில் மித்திரவிந்தை, "சைப்பியை" ( சிபி வம்சத்தவள்) என்ற பெயரால் அவள் சுட்டப்படுகின்றாள். அரி வம்சம் கூறுவதன் படி, அவள் சிபி மன்னனின் மகளான "சுதத்தை".[4]
இன்னொரு கதையில், பலராமரின் ஆணைப்படி, அவந்தி நாடு கௌரவருடன் இணைவது துவாரகைக்கு அச்சுறுத்தல் என்பதால், கண்ணன் தன் மைத்துனியான மித்திரவிந்தையை மணக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அவன் சுபத்திரையை அழைத்துச் சென்று அவள் மனமறிந்து, மித்திரவிந்தையின் சம்மதத்துடன் அவளைக் கவர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.[6] விருகன், கர்சன், அண்ணிலன், கிரீத்திரன், வர்த்தனன், உன்னடன், மகாம்சன், பவணன், வக்கினி, சுதி எனும் பதின்மர் மித்திரவிந்தையின் மைந்தர்களாகச் சொல்லப்படுகின்றனர்.[7][8] சங்கிராமசித்து முதலான பல மைந்தர்கள் அவளுக்கு இருந்ததாக விஷ்ணு புராணம் சொல்கின்றது.[4] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[9] [10] மேலும் பார்க்கஅடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia