கேன்டர்பரி நகரின் அன்சலேம்
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் (Anselm of Canterbury) அல்லது பெக்கின் புனித அன்சலேம் (Anselm of Bec, /ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேன்டர்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும். மேற்கோள்கள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: en:Anselm of Canterbury
|
Portal di Ensiklopedia Dunia