சக்மா திரைப்படத்துறைசக்மா திரைப்படத்துறை அல்லது சக்வுட் என்பது சக்மா மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்த மொழித் திரைப்படங்கள் இந்தியாவில் (திரிபுரா, மிசோரம், அருணாசலப் பிரதேசம்) போன்ற மாநிலங்களிலும் பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றது. சடரூபா சன்யால் இயக்கிய 'தன்யாபி பிர்தி' என்ற திரைப்படம் ஜூலை 19 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1] இது வே வணிக ரீதியான திரையிடலைக் கொண்ட முதல் காணொளித் திரைப்படம் ஆகும்.[2] அதை தொடர்ந்து காணொளி திரைப்படங்களின் தயாரிப்பு வேகத்தை அதிகரித்ததால், சக்மா திரையுலகம் விரிவடைந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3-10 படங்கள் தயாரிக்கப்படுகின்றன.[3]'மோர் தெங்கரி' என்ற திரைப்படம் பங்களாதேஷில் ஒரு பூர்வீக மொழியில் முதல் முறையாக ஒரு கதையைச் சொல்லும் முதல் பங்களாதேஷ் சக்மா மொழித் திரைப்படம் ஆகும்.[4] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia