மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை
மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை (Malaysian Tamil cinema) என்பது மலேசியா நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இது மலேசியா நாட்டில் வளர்ந்து வரும் ஒரு திரைப்படத்துறை ஆகும். 2018 ஆம் ஆண்டு வெளியான 'வெடிகுண்டு பாசாங்கே' என்ற திரைப்படம் அதிக வசூல் செய்த மலேசிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[5] தமிழர் உலகெங்கும் பரவி வாழ்வதால் தங்களின் தாயகத்திற்கு வெளியிலிருந்தும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். இதனால் தாயகத்திற்கு வெளியிலான தமிழ்த்திரைத்துறை வளர்கிறது. குறிப்பாக, தமிழர் அதிகமாக வாழும் தெற்காசியாவில் தமிழ்த் திரைப்படத்துறை சிறந்த வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.[6][7][8] துடிப்பான திரைப்படத் தயாரிப்பாளர்கள், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ்த் திரைத் துறையில் முத்திரை பதிக்கின்றனர்.[9] வரலாறுமலேசியாவின் முதல் தமிழ் திரைப்படம் 'ரதா பேய்' என்ற படம் ஆகும். இந்த திரைப்படம் 1968 ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டு, சனவரி 14, 1969 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு என்பவர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்துறை கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜொகூர் பாரு போன்ற பிரதேசங்களை மையமாகக் கொண்டு குறைவான தொழிலார்களை வைத்து குறைந்தளவான தரமான திரைப்படங்களை தயாரிக்கிறது. பல நேரங்களில் தமிழகத் திரைப்படத்துறைக்கு எதிரான கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான 'செம்மண் சாலை' என்ற திரைப்படம் கிட்டத்தட்ட முற்றிலும் தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[10][11][12] இதே ஆண்டில் வெளியான 'ஓப்ஸ் கோசா தபா' என்ற திரைப்படம் ஒரு திரைப்படத்திற்காக அதிக நடிகர்களைக் கொண்ட படமாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினர்நடிகர்கள்
நடிகைகள்
இயக்குநர்கள்
தமிழ்நாட்டில் மலேசியத் தமிழ்த் திரைப்பட விழாமலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் ஆண்டுக்கொரு முறை தமிழ்நாட்டின் சென்னையில் திரையிடப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மலேசியாவில் தயாரான பத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.[13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia