இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறைஇலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை (Sri Lankan Tamil cinema) என்பது இலங்கைத் திரைப்படத்துறையில் தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இலங்கையில் நடந்த ஈழப் போர் காரணமாக ஈழத் திரைப்படத்துறை பெரும் வளர்சி மற்றும் புகழை பெறவில்லை. இன்று வரைக்கு இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைத் தான் அதிகளவாக பார்க்கின்றனர். வரலாறு![]() இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் திரையிடப்பட்ட குசுமலதா என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட 'சங்கவுனு பிலித்துற' என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம். இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சில ஆண்டுகள் கழித்து தமிழில் அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு சமுதாயம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான ஹென்றி சந்திரவன்ச இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது. 1993 ஆம் ஆண்டு தோட்டக்காரி என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும். 1978 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படம் இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படம் ஆகும். இதே ஆண்டில் வெளியான சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும். ஈழப் போர் காரணமாக இலங்கைத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பு தடை பெற்று இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சில ஆவணத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது. ஆனால் இந்த வகைத் திரைப்படங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் என்ற மண் திரைப்படம் வெளியானது. 2010ஈழப் போர் முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு சில தமிழ்த் திரைப்படங்கள் இலங்கை தமிழ் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரே நாளில் என்ற திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்.[1] 2012 ஆம் ஆண்டு வெளியான இனி அவன் என்ற திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம[2] இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கான் திரைப்பட விழா 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012,[3][4] எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது. 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி கிங்ஸ்[5][6] என்ற திரைப்படம் டெரானா திரைப்பட விருது விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது. தமிழீழத் திரைப்படத்துறைதமிழ்த் திரைப்படங்கள்சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்
புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்இலங்கை திரைப்பட இயக்குனர்கள்
இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்
இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்
இலங்கை திரைப்பட நடிகர்கள்
இலங்கை திரைப்பட நடிகைகள்
இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள்
உசாத்துணைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia