திருக்கண்ணமங்கையாண்டான்திருக்கண்ணமங்கையாண்டான் நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர். நாச்சியார் திருமொழிக்கு இவர் பாடிய இரண்டு தனியன் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம்பெற்றுள்ளன. பாடல்கள்நாலாயிரத் திவ்வியப் பிரபந்தந்த்தில் இடம்பெற்றுள்ள இவரது இருபாடல்களில் ஒன்று நேரிசை வெண்பாவாகவும் மற்றொன்று கட்டளைக் கலித்துறையாகவும் அமைந்துள்ளன.
வாழ்க்கைக் குறிப்புதிருக்கண்ணமங்கை இவரது ஊர். நாதமுனிகளின் தமக்கை இவரது மனைவி. இவர் நாதமுனிகளிடம் திருமறையெழுத்துக் காப்பினைப் [1] பெற்றார். தம்மூர்ப் பக்தவச்சலப் பெருமாளுக்குத் துளசிமாலை சாத்தித் தொண்டாற்றி வந்தார். ஒருநாள் வேடர் இருவரின் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இறந்தன. இதன்பொருட்டு வேடர் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இறந்தனர். அங்கே வந்த இந்த ஆண்டான் தான் பெருமாளுக்காக இறக்கவேண்டும் என எண்ணிப் பல்லக்கிலிருந்து குதித்து, காலால் நடப்பதைக் கைவிட்டு, கைகளால் தவழ்ந்து, பசுவைப்போல் நீரில் விழுந்து, உடை துறந்து வகுளமரத்தடியில் மௌனியாய் இருந்தாராம்.[2] கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia