தேசிய பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes)
இந்திய அரசியலமைப்பு சாா்ந்த ஓர் அமைப்பாகும். இந்திய அரசியலமைப்பின் 89 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் இவ்வாணையம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1]
வரலாறு
அரசியலமைப்பின் 89 ஆவது சட்டத் திருத்தத்தின் படி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதிடன்று நடைமுறைக்கு வந்தது. பழங்குடியின பிாிவினருக்கான தேசிய ஆணையமானது இந்திய அரசியலமைப்பின் உட்பிரிவு எண் 338 அ இன் படி உருவாக்கப்பட்டதாகும். பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்புகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான முந்தைய தேசிய ஆணையத்தை இது இரண்டாகப் பிரித்தது.[2]
இந்த திருத்தத்தின் படி, முன்னதாக அமைப்பப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிாிவுனருக்கான தேசிய ஆணையம் மாற்றப்பட்டு தற்போது இரண்டு ஆணையங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட பிாிவுனருக்கான தேசிய ஆணையம் மற்றொன்று பழங்குடியின பிாிவினருக்கான தேசிய ஆணையம் என்பவை இவ்விரண்டு ஆணையங்களாகும்.
முதல் ஆணையம் 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது இதன் தலைவராக மத்தியப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினர் குன்வர் சிங் இருந்தார்.
இரண்டாவது ஆணையம் 2007 ஆம் ஆண்டில் ஊர்மிளா சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.
மூன்றாவது ஆணையம் 2010 ஆம் ஆண்டில் இராமேசுவர் ஓரான் தலைமையில் உருவாக்கப்பட்டது.[3]
நான்காம் ஆணையம் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்ட போது, இராமேசுவர் ஓரான் மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[4] நான்காவது ஆணையத்தின் துணைத் தலைவராக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தை சோ்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிறீ. இரவி தாமூதாகூா் நியமிக்கப்பட்டாா்.[5]
குழு இயைபு
ஆணையத்தில் ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒரு பெண் உறுப்பினர் உட்பட மூன்று முழுநேர உறுப்பினர்கள் உள்ளனர். ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலமும் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
செயற்பாடுகள்
தேசிய பழங்குடியினர் ஆணையம் கிழ்கண்ட செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும் :
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் கீழும் அல்லது வேறு எந்த சட்டத்தின் கீழும் தற்போது நடைமுறையில் உள்ள அல்லது அரசாங்கத்தின் எந்த உத்தரவின் கீழும் வழங்கப்பட்ட பாதுகாப்புகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து கண்காணித்தல், அத்தகைய பாதுகாப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல்;
பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பறிக்கப்படுவது தொடர்பான குறிப்பிட்ட புகார்களை விசாரித்தல்;
பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமிடல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கும் ஆலோசனை வழங்குதல், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி மற்றும் எந்தவொரு மாநிலத்திலும் அவர்களின் வளர்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல்;
ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமானதாகக் கருதும் மற்ற நேரங்களில், அந்தப் பாதுகாப்புகளின் செயல்பாடு குறித்த அறிக்கைகளை குடியரசு தலைவருக்கு வழங்குதல்;
இத்தகைய அறிக்கையில், மத்திய அரசு அல்லது எந்தவொரு மாநிலமும் பழங்குடியினாின் பாதுகாப்புத் திட்டங்கள், நலவாழ்வு மற்றும் அவா்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை அளித்தல்;
நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் குடியரசுத் தலைவா் வெளியிடப்பட்ட பழங்கடி மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தொடர்புடைய பிற செயல்பாடுகளை பாதுகாத்தல்;
பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு தொடர்பாக பின்வரும் பிற செயல்பாடுகளையும் ஆணையம் நிறைவேற்றும்.
வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு சிறு வனப் பொருட்களைப் பொறுத்தமட்டில் உரிமையாளர் ஆக்குவதற்கான உரிமைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
பழங்குடியின சமூகத்தினருக்கு கனிம வளங்கள், நீர் வளங்கள் போன்றவற்றின் மீது அவர்களின் சட்டப்படி உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாத்தியமான வாழ்வாதார உத்திகளை நகர்த்துவதற்கான நடவடிக்கைகள்.
வளர்ச்சித் திட்டங்களால் இடம்பெயர்ந்த பழங்குடியினக் குழுக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
பழங்குடியின மக்கள் நிலத்திலிருந்து அந்நியப்படுவதைத் தடுப்பதற்கும், ஏற்கனவே அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் அத்தகையவர்களை திறம்பட மறுவாழ்வு கொடுப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
காடுகளைப் பாதுகாப்பதற்கும் சமூக காடு வளர்ப்பை மேற்கொள்வதற்கும் பழங்குடியின சமூகங்களின் அதிகபட்ச ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
பஞ்சாயத்துகளின் விதிகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 ஐ முழுமையாக செயல்படுத்துவதை உறுதிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
பழங்குடியினரின் தொடர்ச்சியான அதிகாரமின்மைக்கும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலின் சீரழிவுக்கும் இட்டுச்செல்லும் பழங்குடியினரின் விவசாயத்தை மாற்றும் நடைமுறையைக் குறைப்பதற்கும், இறுதியில் அகற்றுவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.