தேவிபட்டினம்
இவ்வூரின் சிறப்புகடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள் உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில் உள்ளது.[6] தேவிபட்டினம் சக்திபீடம்தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவிலை சிலர் சக்தி பீடமென்பர். ஏனெனில் மேரு தந்திரத்தின்படி தேவிகோட்டம் என்பது தேவியின் இடது அக்குள் விழுந்த இடமாகும். மேலும் இதுவே சமஸ்கிருதத்தின் சகாரம் தோன்றிய இடமுமாகும். தேவிகோட்ட பீடத்தின் தேவியின் பெயர் அகிலேஸ்வரி என்று ப்ருஹன் நீல தந்திரம் கூறுகிறது. தமிழ்நாட்டின் தேவிபட்டினத்தில் உலகநாயகி என்ற அம்மன் கோவில் உண்டு. உலகம் என்பதும் அகிலம் என்பதும் ஒன்றேயென்பதால் இதுவே சக்தி பீடமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலில் உள்ள அம்பிகையின் சுயம்பு பல சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பில் உள்ளது. ஆகவே பல்வேறு ஆதாரங்களின்படி இந்த இடமே தேவிகோட்டம் என்ற சக்தி பீடம் என்பர். இதை வீரசக்தி பீடம் என்றும் கூறுவர்.[5] புராணம்ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என புராணங்கள் கூறுகின்றன. இதனையும் காண்க
மேற்கோள்கள்
இவற்றையும் கான்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia