பாலக்கோடு வட்டம்பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டம் பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை என 4 உள்வட்டங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சி உள்ளது. நகரங்கள்பரப்பளவுபாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம். மக்கள் வகைப்பாடு2016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 185141 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia