பென்னாகரம் வட்டம்பென்னாகரம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பென்னாகரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நாதம் என 4 உள்வட்டங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்உள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ராகரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்கரை ஆகும். பரப்பளவுபென்னாகரம் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,13,027 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம். மக்கள் வகைப்பாடு2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,34,853 மக்கள் பென்னாகரம் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பென்னாகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia