பாலக்கோடு
பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. [3] பாலக்கோடு நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கி.மீ.; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கி.மீ.; கிழக்கில் காரிமங்கலம் 17 கி.மீ.; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கி.மீ., தொலைவில் உள்ளன. தேன்கனிகோட்டை 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.ராயக்கோட்டை 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது.[5] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°05′E / 12.3°N 78.08°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia