பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த் (Pramod Sawant)(பிறப்பு: 24 ஏப்ரல் 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கோவா மாநிலத்தின் 13ஆவது (தற்போதைய) முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[2] இளமைக் காலம்இவர் ஏப்ரல் 24, 1973 ஆண்டு பாண்டுரங் - பத்மினி சாவந்த் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] இவர் கோலாப்பூரில் உள்ள கங்கா ஆயுர்வேதி மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். இவரது மனைவி சுலக்சனா சவான்ட் ஆவார்.[5] இவர் பிக்கோலிம் நகரில் உள்ள ஶ்ரீ சாந்ததுர்கா மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளார்.[6] அரசியல் வாழ்க்கைசாவந்த் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள சான்கியூலிம் தொகுதியிலிருந்து கோவ சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். கோவா முதலமைச்சராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia