சாகிப் சிங் வர்மா
சாகிப் சிங் வர்மா (Sahib Singh Verma) இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும் (1996–1998), இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் (1999–2004) பணியாற்றியவர்.[2] இந்திய நடுவண் அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.[3] சாகிப் சிங் வர்மா தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 30 சூன் 2007-இல் இறந்தார். இளமையும் கல்வியும்சாகிப் சிங் வர்மா ஜாட் இன வேளாண்மைக் குடும்பத்தில், மீர் சிங் – பார்பாய் தேவி இணையருக்கு 15 மார்ச் 1943-இல் தில்லி அருகே முண்டகா எனும் கிராமத்தில் பிறந்தவர். சாகிப் சிங் வர்மா இளமையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து சமூக – அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.[4] முதுகலை பட்டப்படிப்பு முடித்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.[5][6] பின்னர் தில்லி சாகித் பகத் சிங் கல்லூரியில் நூலகராகப் பணியில் சேர்ந்தார்.[7] அரசியல்சாகிப் சிங் வர்மா 1977-இல் தில்லி மாநகராட்சி தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றவர். சாகிப் சிங் வர்மா 1993-இல் மதன் லால் குரானா அமைச்சரவையில் தில்லி மாநில கல்வி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 1996-இல் ஊழல் வழக்கில் மதன் லால் குரான பதவி விலகியதை அடுத்து, சாகிப் சிங் வர்மா தில்லி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.[8] தில்லியில் வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தின் காரணமாக சாகிப் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1999-இல் தில்லி புறநகர் தொகுதியிலிருந்து சாகிப் சிங் வர்மா இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில், இந்திய நடுவண் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia