புதூர் (செங்கோட்டை)
புதூர் (செ) பேரூராட்சி (ஆங்கிலம்:Pudur (S)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, இரவியதர்மபுரம், கீழப்புதூர், மேலப்புதூர், கண்ணுபுளிமெட்டு, கேசவபுரம் ஆகியவை இணைந்ததே புதூர் (செங்கோட்டை) பேரூராட்சி ஆகும் அமைவிடம்புதூர் (செ) பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில், கேரளா செல்லும் சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கி.மீ. தொலைவில் உள்ள செங்கோட்டையில் உள்ளது இதனருகே அமைந்த ஊர்கள் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி ஆரியங்காவு ஆகும். பேரூராட்சியின் அமைப்பு33.21 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மககளவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3322 வீடுகளும், 12457 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia