ஆழ்வார்குறிச்சி
ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில்இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் தை பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.[3] அமைவிடம்இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கி.மீ. தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கி.மீ. தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கி.மீ. தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும்.[4] பேரூராட்சியின் அமைப்பு14.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது.[6][7] கல்வி நிறுவனங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia