பொந்தியானா சுல்தானகம்
பொந்தியானா சுல்தானகம் எனப்படுவது தற்கால இந்தோனேசியாவின் பொந்தியானாவில் காணப்பட்ட முடியாட்சி நாடாகும். வரலாறுபொந்தியானா சுல்தானகம் இமாம் அலீ அர்-ரிளா அவர்களின் வழித்தோன்றலாகிய சையிது ஷரீப் அப்துர் ரஹ்மான் அல்-காதிரி என்பவர் நாடு காண் பயணியாக ஹளரமௌத்திலிருந்து புறப்பட்டு இவ்விடத்தை அடைந்த பின்னர் அவரால் 1771 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் பெனம்பாகான் மெம்பாவா அரசரின் மகளையும் பஞ்சார் சுல்தானின் மகளையும் மணந்ததன் மூலம் கலிமந்தானில் இரு முறை அரசியல் திருமணங்களைச் செய்தார். அவர்கள் பொந்தியானாவை அடைந்து காதிரிய்யா அரண்மனையைக் கட்டுவித்தனர். பின்னர் 1779 ஆம் ஆண்டு அவர் ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியினால் பொந்தியானா சுல்தானாக அங்கீகரிக்கப்பட்டார்.[1] பொந்தியானா சுல்தானகம் இலன்பாங் குடியரசுடன் நட்புறவு பாராட்டியது. பொந்தியானாவின் சுல்தான் ஷரீப் முகம்மது அல்-காதிரீ கலிமந்தானிலிருந்த ஏனைய மலாய சுல்தான்கள் அனைவருடனும் சேர்த்து பொந்தியானா நிகழ்வின் போது யப்பானியரால் கொல்லப்பட்டார். அவரது மகன்மாரிருவரும் கூட யப்பானியரால் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பொந்தியானாவின் சுல்தான்கள்[2]
உசாத்துணை
மேலதிக வாசிப்புக்கு
|
Portal di Ensiklopedia Dunia