மக்களவைத் துணைத்தலைவர் ( IAST : Lok Sabhā Upādhyakṣa) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் இரண்டாவது மிக உயர்ந்த பேரவை அலுவலர் ஆவார். இந்திய மக்களவைத் தலைவர் மரணம் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு அல்லது சபையில் இல்லாவிட்டால் சபைக்குத் தலைமை தாங்கிச் செயல்படுவார். இந்தியாவில் மரபுப்படி எதிர்க்கட்சிக்குத் துணைத்தலைவர் பதவி வழங்கப்படுகிறது.[1]
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்களிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பேரவைத் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வரை அல்லது தாமாக பதவியிலிருந்து விலகும் வரை பதவியில் இருப்பார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம்.[2] இதற்கான தீர்மானத்தில் பெரும்பான்மையில், காலியிடங்களை அகற்றிய பிறகு, மொத்த பலத்தில் 50% அல்லது 50% க்கும் அதிகமாக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மக்களவைக்குத் துணைத்தலைவர் பொறுப்பு என்பதால், மக்களவையில் உள்ள பெரும்பான்மையால் மட்டுமே இவரை நீக்கம் செய்ய முடியும். துணைத் தலைவர் பதவியிலிருந்தாலும், இவர் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்றாலும், தங்கள் கட்சியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியக் குடியரசின்நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களிலிருந்து துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் மார்ச் 2021 நிலவரப்படி, குடியரசு வரலாற்றில் தனித்துவமாக, மக்களவையில் இப்பதவி காலியாக உள்ளது.[3]
பட்டியல்
எண்: தற்போதைய வரிசை எண்
† அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார் அல்லது இறந்தார்
§ முந்தைய பதவிக் காலத்துக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு வந்தார்
↑The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period
குறிப்புகள்
↑This column only names the deputy speaker's party. The deputy speaker may elected by coalition of several parties and independents; these are not listed here.