மலாக்கா நுழைவாயில்மலாக்கா நுழைவாயில் (மலாய்: Gerbang Melaka; ஆங்கிலம்: Melaka Gateway; சீன மொழி: 马六甲皇京港; பின்யின்: Mǎliùjiǎ huáng jīng gǎng) என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா நீரிணையின் கரையோரத்தில் உருவாக்கப்படும் செயற்கை தீவுகளின் பெயராகும். இந்தச் செயற்கைத் தீவுகள் 7 பிப்ரவரி 2014 அன்று மலேசியப் பிரதமர், டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் அருண் அவர்களும் அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 2018-இல் திறக்கப்பட்ட இந்தச் செயற்கைத் தீவுகளின் கட்டுமானம் 2025-இல் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1] பொதுநவம்பர் 2020-இல், இந்தத் திட்டம் மலாக்கா மாநில அரசால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2][3] பின்னர், அப்போதைய மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, மலாக்காவின் செயற்கைத் தீவுத் திட்டம் கைவிடப்படாது என்று கூறினார். புதிய மேம்பாட்டரால் அத்திட்டம் மேற்கொள்ளப்படும். என்றும்; அதே வேளையில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டும் என்றும் அறிவித்தார்.[4][5][6] கேஏஜே மேம்பாட்டு நிறுவனம் சீன மொழி: 凯杰发展有限公司; பின்யின்: Kǎi jié fāzhǎn yǒuxiàn gōngsī) தற்போது, இந்தத் திட்டத்தின் திட்டத்தின் முதன்மை குத்தகையாளராகச் செயல்பட்டு வருகிறது.[7] 23 பிப்ரவரி 2022 அன்று மலாக்கா மாநில அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு மீண்டும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.[8] 2025-ஆம் ஆண்டு இறுதியில் இந்தத் திட்டம் நிறைவுபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[9] மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia