ராக்காய் வாராக்

ராக்காய் வாராக்
Rakai Warak
Srī Mahārāja Rakai Warak
Srī Mahārāja Rakai Warak
Rakai Warak Dyah Manara
சிறீவிஜயம்மாதரம் இராச்சியம்
4-ஆவது அரசர்
ஆட்சிக்காலம்(3 மார்ச் 803 - 26 சூலை 827)
முன்னையவர்ராக்காய் பனராபன்
(Rakai Panaraban)
பின்னையவர்தயா குலா
பிறப்புதயா மானரன்
(Dyah Manara)
குழந்தைகளின்
பெயர்கள்
தயா குலா
மரபுசைலேந்திரம்
தந்தைராக்காய் பனராபன்
(Rakai Panaraban)
மதம்இந்து
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

ராக்காய் வாராக் அல்லது மகாராஜா ராக்காய் வாராக் (ஆங்கிலம்: Rakai Warak; Srī Mahārāja Rakai Warak; இந்தோனேசியம்: Rakai Warak Dyah Manara) என்பவர் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தின் சைலேந்திர மரபைச் சார்ந்த அரசர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் 3 மார்ச் 803 - 26 சூலை 827. இவர் மாதரம் இராச்சியத்தின் 4-ஆவது அரசர் ஆவார்.

8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில், மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர் சிறீவிஜயத்தின் அரசராகவும் இருந்தார்.[1] மாதரம் இராச்சியத்தின் ஆளுமையின் கீழ் சிறீ விஜயப் பேரரசு அமையப் பெற்றதும், மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த அதே அரசர்கள் சிறீ விஜயப் பேரரசையும் ஒருசேர ஆட்சி செய்தனர்.

ராக்காய் வாராக் எனும் பெயரும் சமரகரவீரன் (Samaragrawira) எனும் பெயரும்; ஒரே நபரைக் குறிப்பிடுவதாக வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அது ஓர் அனுமானம் என்று அண்மைய் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

சர்ச்சைகள்

இந்தோனேசிய வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானா (Slamet Muljana) முன்வைத்த ஒரு கோட்பாடு; சமரகரவீரனின் அசல் பெயர் சமரகரவீரர் என்றும்; அவர் சிறீ விஜய மன்னர் பாலபுத்திர தேவாவின் (Balaputradewa) தந்தை என்றும் கூறுகிறது.

எனினும், நாளந்தா கல்வெட்டின் பதிவுகளின்படி, பாலபுத்திரதேவா என்பவர், சோம வம்சத்தைச் சேர்ந்த தருமசேதுவின் மகள் தேவி தாராவுக்குப் (Tara Dharmasetu) பிறந்த சமரகரவீரனின் மகனாவார். பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் தருமசேது சிறீ விஜய இராச்சியத்தின் மன்னர் என்று நம்புகிறார்கள்.

உண்மையில், பாலபுத்திரதேவா தன் தாத்தாவிடம் இருந்து சுமாத்திரா தீவின் அரியணையைப் பெற்றார். இதுவே வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானாவின் கருத்தும் ஆகும். பாலபுத்திரதேவா எனும் பாலபுத்திரன் தருமசேதுவிடம் இருந்து சிறீ விஜய அரியணையைப் பெறவில்லை; சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், பாலபுத்திரதேவா சிறீ விஜயத்தின் அரசராக முடிந்தது என்றும்; சிலாமெட் முல்ஜானா தம் கருத்தை முன்வைக்கிறார்.

அரச வரலாறு

ராக்காய் வாராக் எனும் பெயர் மந்தியாசி கல்வெட்டு, வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகியவற்றின் மூலமாக அறியப்படுகிறது. மேலும் வங்சாகீர்த்தா கையெழுத்துச் சுவடியின் மூலமாக (Naskah Wangsakerta) அவரின் பெயர் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.[2]

மந்தியாசி கல்வெட்டில் காணப்படும் மாதரம் இராச்சியத்தின் மன்னர்களின் பட்டியலில் சிறீ மகாராஜா ராக்காய் வாராக் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது பெயர் ராக்காய் பனராபனுக்கு (Rakai Panaraban) பிறகும், ராக்காய் காருங்கிற்கு (Rakai Garung) முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானுவா தெங்கா III கல்வெட்டு

இருப்பினும், இது வானுவா தெங்கா III கல்வெட்டில் காணப்படும் மன்னர்களின் பட்டியல், மற்ற கல்வெட்டுகளில் இருந்து வேறுபட்டது. அங்கு ஸ்ரீ மகாராஜா ராக்காய் வாராக்-கின் பெயர் ராக்காய் பனராபனுக்கு (Rakai Panaraban) பிறகும், தயா குலாவுக்கு (Dyah Gula) முன்பும் குறிப்பிடப்படுகிறது.

ராக்காய் வாராக் என்ற பெயர் உண்மையான பெயர் அல்ல; ஏனெனில் இந்தப் பெயரின் பொருள் வாராக் பிராந்தியத்தின் தலைவன் என்பதாகும். இருப்பினும், வானுவா தெங்கா III கல்வெட்டில், அவரது உண்மையான பெயர் தயா மனாரா (Dyah Manara) என்று அறியப்படுகிறது.

பழைய ஜாவானிய மொழியில் ராக்காய் என்றால் தலைவன் என்று பொருள் படும். ராகா (raka) அல்லது ராகே (rake) எனும் சமசுகிருதச் சொல்லில் இருந்து உருவானது.

மேலும் காண்க

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
ராக்காய் வாராக்
803—827
பின்னர்

மேற்கோள்கள்

  1. Boechari (2013-07-08). Melacak Sejarah Kuno Indonesia lewat Prasasti. Kepustakaan Populer Gramedia. ISBN 978-979-91-0520-2.
  2. Muljana, Prof Dr Slamet (2006-01-01). Sriwijaya. Lkis Pelangi Aksara. ISBN 978-979-8451-62-1.

சான்றுகள்

  • Ayatrohaedi. 2005. SUNDAKALA Cuplikan Sejarah Sunda Berdasarkan Naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Bandung: Pustaka Jaya
  • Marwati Poesponegoro & Nugroho Notosusanto. 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
  • Slamet Muljana. 2006. Sriwijaya (terbitan ulang 1960). Yogyakarta: LKIS

வெளி இணைப்புகள்

  • Ayatrohaedi. 2005. SUNDAKALA Cuplikan Sejarah Sunda Berdasarkan Naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Bandung: Pustaka Jaya
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya