அந்த வகையில் மந்தியாசி கல்வெட்டில் சஞ்சய வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்களின் பெயர்களுக்கான தலைப்பு சிறீ மகாராஜா என்றுதான் வழங்கப்பட்டு உள்ளது. தயா குலா ஒரு மகாராஜா பதவியைப் பெறவில்லை என்பதால் மந்தியாசி கல்வெட்டில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.[9]
ஏர் லங்காட் கல்வெட்டு முழுமை பெறாத நிலையில் காணப்பட்டது; அத்துடன் ஆண்டு எண்களைக் கொண்ட முதல் தட்டும் காணப்படவில்லை.[6] அத்துடன் இந்தக் கல்வெட்டின் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை. ஆனால், கி.பி 885-888-க்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று மட்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.[6]
ஏர் லங்காட் கல்வெட்டில் தகவாசன் என்ற பெயரில் ராக்காய் என்ற பிராந்தியப் பெயர் எதுவும் இல்லை; ஒருவேளை தகவாசன் அரியணை ஏறியபோது அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றியபோது; அவர் மாதரம் இராச்சியத்தின் தலைநகரிலோ அல்லது பிராந்தியங்களிலோ பதவி வகிக்காமல் இருந்து இருக்கலாம்; அல்லது அவர் முதிர்ச்சி அடையாமல் இருந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[10][11][12]
↑Dwiyanto, Djoko. 1986. Pengamatan terhadap Data Kesejarahan dari Prasasti Wanua Tengah III tahun 908 Masehi. Dalam PIA IV (IIa). Jakarta: Pulit Arkenas, h. 92-110.
↑Seminar Sejarah Nasional IV: Sub tema historiografi. Departemen Pendidikan dan Kebudayaan, Direktorat Sejarah dan Nilai Tardisional [i.e. Tradisional], Proyek Inventarisasi dan Dokumentasi Sejarah Nasional. 1985.
↑Seminar Sejarah Nasional IV: Sub tema historiografi. Departemen Pendidikan dan Kebudayaan, Direktorat Sejarah dan Nilai Tardisional [i.e. Tradisional], Proyek Inventarisasi dan Dokumentasi Sejarah Nasional. 1985.