தரணிந்திரன்

தரணிந்திரன்
King Dharanindra
Sri Sanggrama Dhananjaya
Indra Raja Mataram
Indra Utawa Dharanindra
Sangramadhananjaya
சிறீவிஜயம்மாதரம் அரசர்
ஆட்சிக்காலம்775—800
முன்னையவர்ராக்காய் பனங்கரன்
பின்னையவர்சமரகரவீரன்
(Samaragrawira)
பெயர்கள்
மாதர இந்திர ராஜா
Indra Raja Mataram
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

தரணிந்திரன் அல்லது மாதர இந்திர ராஜா (ஆங்கிலம்: Dharanindra அல்லது King Dharanindra; இந்தோனேசியம்: Indra Raja Mataram; ஜாவானியம்: Indra Utawa Dharanindra) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார்.

பனங்கரனின் வாரிசான தரணிந்திரன், 775—800-ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில், சிறீ விஜயப் பேரரசை ஆட்சி செய்தார்.[1]

அதே வேளையில் மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தின் அரசராகவும் பொறுப்பு வகித்தார். தரணிந்திரன், சைலேந்திர அரச மரபைச் சேர்ந்தவர் ஆவார்.

வரலாறு

ஒரே காலக்கட்டத்தில், இரு இராச்சியங்களை ஆட்சி செய்த தரணிந்திரன், ஒரு சிறந்த ஆட்சியாளராகவும்; சைலேந்திராவின் வெளிநாட்டுப் படையெடுப்புகளுக்குப் பெருமை சேர்த்தவராகவும் அறியப்படுகிறார். 782-ஆம் ஆண்டு கெலுராக் கல்வெட்டில் (Kelurak inscription) அவரின் ஆட்சிப் பெயரான சிறீ சங்கராம தனஞ்செயன் (Sri Sanggrama Dhananjaya) எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]:91

கெலுராக் கல்வெட்டில் அவர் வைரவர வீரமர்த்தனன் (Wairiwarawiramardana) அல்லது "துணிச்சலாக எதிரிகளைக் கொன்றவர்" என்றும் புகழப் படுகிறார். தெற்கு தாய்லாந்து மலாய் தீபகற்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லிகோர் பி கல்வெட்டிலும் (Ligor B inscription) சர்வரி மதவிமதன (Sarwwarimadawimathana) எனும் பெயர் காணப்படுகிறது; இந்தப் பெயர் அதே தரணிந்திரனைக் குறிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

தாமரலிங்கா

தரணிந்திரன் ஒரு போர்க் குணமிக்க அரசராக அறியப்படுகிறார். அவர் வெளிநாடுகளுக்கு, பல இராணுவக் கடற்படைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். மலாய் தீபகற்பத்தில் சயாமியர் கட்டுப்பாட்டில் இருந்த லீகோர் பகுதியையும் சைலேந்திரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.[3]

லிகோர் என்பது நக்கோன் சி தம்மராத் இராச்சியம் (Nakhon Si Thammarat) (தாய்: อาณาจักรนครศรีธรรมราช) என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 10-ஆம்; 13-ஆம் நூற்றாண்டுகளில் இந்த இராச்சியம் தாமரலிங்கா (Tambralinga) என்று அழைக்கப்பட்டது.[4]

சென்லா

நகர சிறீ தருமராஷ்டிரா (Nagara Sri Dharmarashtra) என்று முன்பு அழைக்கப்பட்ட தாமரலிங்கா இராச்சியம், தற்போது தாய்லாந்தில் ஒரு மாவட்டம் ஆகும். நீர் சென்லா (Water Chenla); கெமர்: ចេនឡាទឹកលិច) எனும் சயாமிய பகுதியில் இருந்து லிகோரைக் கைப்பற்றிய பிறகு தரணிந்திரன், 774; 770-ஆம் ஆண்டுகளில், சம்பா இராச்சியத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கினார்.[5]

பின்னர் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீக்கோங் படுகையில் இருந்த தெற்கு கம்போடியா கைப்பற்றப்பட்டது.

இரண்டாம் செயவர்மன்

அந்தக் காலகட்டத்தில், ஜாவாவைச் சேர்ந்த இரண்டாம் செயவர்மன்[6] (Jayavarman II), சைலேந்திர (சிறீ விஜய) படையின் தளபதியாக இருந்திருக்கலாம்; சிறீவிஜய அரசர் தரணிந்திரனின் ஆணையின் பேரில், இரண்டாம் செயவர்மன் புதிய கம்போடியா மன்னராகப் பதவியேற்று; புதிய அங்கோர் வம்சம் (Angkor Dynasty) நிறுவப்பட்டு இருக்கலாம் என நம்பபடுகிறது.[7]

மன்னர் தரணிந்திரன் தன் முன்னோடி ஆட்சியாளர் பனங்கரனின் கட்டுமான மரபைத் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. மத்திய ஜாவா மஞ்சு கிரகா கோயிலின் கட்டுமானத்தைத் தொடர்ந்து முடித்தார்.[8]

காராங்தெங்கா கல்வெட்டு

மேலும் காராங்தெங்கா கல்வெட்டின் (Karangtengah inscription) (824 தேதியிட்டது) பதிவுகளின்படி,[9] மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிங்காவென் கோயிலுடன் தொடர்புடைய வேணுவன கோயிலின் (Venuvana temple) கட்டுமானத்திற்கும் பொறுப்பேற்றார்.

போரோபுதூர் மற்றும் மத்திய ஜாவா பாவோன் கோயிலின் கட்டுமானத்திற்கும், தரணிந்திரன் பொறுப்பேற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Slamet Muljana (2006). Sriwijaya. LKIS, Yogyakarta.
  2. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  3. Roland Braddell (1980). A Study of Ancient Times in the Malay Peninsula and the Straits of Malaccam and Notes on Ancient Times in Malaya. Malaysian Branch of the Royal Asiatic Society. p. 398.
  4. Stuart Munro-Hay (2001). Nakhon Sri Thammarat: The Archaeology, History and Legend of a Southern Thai Town. White Lotus Press. p. 22.
  5. "Encyclopedia of Ancient Asian Civilizations by Charles F. W. Higham - Chenla - Chinese histories record that a state called Chenla..." (PDF). Library of Congress. Retrieved 13 July 2015.
  6. Jean Boisselier. Trends in Khmer Art Volume 6 of Studies on Southeast Asia. Ithaca, N.Y. : Southeast Asia Program, Cornell University, 1989. ISBN 0877277052.
  7. Takashi Suzuki (25 December 2012). "Śrīvijaya―towards ChaiyaーThe History of Srivijaya". http://www7.plala.or.jp/seareview/newpage6JII.html
  8. Gunawan Kartapranata; Septa Inigopatria; Emille Junior (2015-04-20), "Candi Sewu Mandala Suci Manjusrigrha", Harian Kompas via Youtube, retrieved 2018-09-08
  9. Drs. R. Soekmono (1988) [1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 46.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya