ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா
ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Bakau Rajang; ஆங்கிலம்: Rajang Mangroves National Park) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு சதுப்புநில தேசியப் பூங்கா ஆகும். 9374 எக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்கா 2000-ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டது.[1] மற்ற சதுப்புநிலக் காடுகளைப் போல் அல்லாமல், ராஜாங் சதுப்புநிலக் காடுகள் ராஜாங் ஆற்றங்கரையில் 3.5 மீட்டர் வரை உயர்ந்து, 3.65 கிமீ வரை உள்நாட்டுச் சமநிலநிலத்தில் பரவுகின்றன.[2] பொதுமண்ணரிப்பு, அலை வெள்ளம் மற்றும் உப்பு ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து கடற்கரையைப் பாதுகாப்பதில் இந்தச் சதுப்புநில தேசியப் பூங்கா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[3] தற்போது, இந்தத் தேசிய பூங்கா பொதுமக்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை. இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள நகரம் சரிக்கே. உயிரினங்கள்ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா பலவகையான கடல்வாழ் நிலவாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:[4][5]
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia