லூவு இராச்சியம்
லூவு இராச்சியம் அல்லது லூவு, வாரிக் (ஆங்கிலம்: Kingdom of Luwu அல்லது House of Royal Buginese Luwu; மலாய்; இந்தோனேசிய மொழி: Kerajaan Luwuk; சீனம்: 魯屋國) என்பது இந்தோனேசியாவின் நவீனகால தெற்கு சுலாவெசி மாநிலத்தின் வடக்குப் பகுதியில், சுலாவெசி தீவில் அமைந்துள்ள ஓர் அரசியல் அமைப்பாகும். இந்த இராச்சியம் சுலாவெசியில் உள்ள தொடக்ககால பூகிஸ் இராச்சியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 10 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் நிறுவப்பட்டது. இருப்பினும், அண்மைய தொல்பொருள் ஆராய்ச்சி இந்த கருத்தில் ஐயப்பாடு கொண்டுள்ளது.[1] வரலாறுலூவுவின் தோற்றம்லூவுபற்றிய தொடக்ககாலக் குறிப்பு, மஜாபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் (Nagarakretagama) (c.1365) எனும் சாவக நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கவிதை நூல், சுலாவெசி தீவின் தெற்குப் பகுதியில் உள்ள லூவு, பாந்தேங் (Bantaeng Regency) மற்றும் உடா (சீனா) ஆகியவற்றை சுலாவெசி தீபகற்பத்தின் மூன்று முக்கிய சக்திகளாகப் பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், 1300-க்கு முன்னர் லூவு பகுதியில் பூகிஸ் குடியேற்றம் இருந்ததற்கான உறுதியான தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை.[2][3] பூகிஸ் மொழி பேசும் குடியேறிகள் சுலவேசியின் மேற்கு சென்ரானா பள்ளத்தாக்கில் (Cénrana Valley) இருந்து வந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அவர்கள் கி.பி 1300 ஆம் ஆண்டு வாக்கில் லூவு கடலோரப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். அதனால்தான் பூகிஸ் மக்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் கடற்கரையில் மட்டுமே காணப்படுகின்றன. பூகிஸ் குடியேறிகள் லூவு பழங்குடி மக்களுடன் வணிகம் செய்வதற்காக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. தொல்லியல் மற்றும் உரைக்குறிப்புச் சான்றுகளில் இருந்து லூவு என்பது பல்வேறு இனக்குழுக்களின் பூகிஸ் தலைமையிலான கூட்டணி என்பது தெளிவாகிறது. இந்த குழுக்கள் வணிக உறவுகளாலும், லூவுவின் டத்து (ஆட்சியாளர்) என்பவரின் அமைதியை அமல்படுத்தும் திறனாலும் ஒன்றுபட்டன. ஒரு வகையில் மலைவாழ் பழங்குடியினரிடையே அமைதி நிலைநாட்டப்பட்டது. முதல் ஆட்சியாளர் தேவராஜாலூவுவின் அரசியல் பொருளாதாரம், பெரும்பாலும் இரும்பு தளவாடப் பொருட்கள் உருக்குவதை அடிப்படையாகக் கொண்டது. உருக்கப்பட்ட இரும்பிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிக்கப்பட்டன. அந்தக் கருவிகள் நெல் விளையும் தெற்கு தாழ்நிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது லூவு இராச்சியத்திற்கு பெரும் செல்வத்தைக் கொண்டு வந்தது. 15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் லூவு இராச்சியத்தின் தொடக்கக்கால ஆட்சியாளர் பதாரகுரு (Bataraguru) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் பெயர் ஓர் அமைதி உடன்படிக்கையில் காணப்படுகிறது. இருப்பினும், முதல் ஆட்சியாளர் தேவராஜா (Dewaraja) என்பவர்தான் என அண்மைய காலச் சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.[4] அவர் 1495 முதல் 1520 வரை ஆட்சி செய்தார் என்பதும் உறுதியாகிறது. தெற்கு சுலவாசியில் உள்ள கதைகள் அண்டை நாடான வாஜோ மற்றும் சிடென்ரெங் மீது தேவராஜாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைப் பற்றி கூறுகின்றன.[4] இவர் சங்கீரன், டத்து சங்காரியன், டத்து கெல்லாலி என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.[4] 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு போரில் தோல்வி அடைந்த தேவராஜா, போன் நீரிணைப் பகுதியில் (Gulf of Bone) இருந்து, வெறும் 20 பேருடன் லூவுக்கு மயிரிழையில் தப்பிச் சென்றதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.[5] இசுலாமிய ஆட்சியாளர்1605 பிப்ரவரி 4 அல்லது 5-ஆம் தேதி, லூவுவின் ஆட்சியாளரான லா படிவாரெக் (La Patiwareq), என்பவர் இசுலாத்தை ஏற்றுக்கொண்ட முதல் தெற்கு சுலவேசி ஆட்சியாளரானார். அவர் சுல்தான் முகமது வாலி மு’சிர் (அல்லது முசாகிர்) அல்-தின் (Sultan Muhammad Wali Mu’z’hir) என்ற பட்டத்தைப் பெற்றார்.[6] 16-ஆம் நூற்றாண்டில் இந்த குடியேற்றத்தின் மக்கள் தொகை 15,000 ஆக இருந்தது. இந்தக் குடியேற்றம் ஏன் திடீரென கைவிடப்பட்டது என்பது தெரியவில்லை. மதக் கொந்தளிப்பு; இரும்புப் பொருட்களின் விலை சரிவு; அல்லது தோராஜா மலைப் பகுதிகளுடனான (Toraja Highlands) வணிகம் குறைந்தது போன்ற காரணங்களாக இருக்கலாம். 19-ஆம் நூற்றாண்டில், லூவு ஒரு பின்தங்கிய நிலமாக மாறியது. அதைப் பற்றி சரவாக்கின் ராஜாவான ஜேம்ஸ் புரூக், 1830-களில் பின்வருமாறு எழுதியுள்ளார். 'லூவு பழமையான பூகிஸ் மாநிலமாக உள்ளது. மேலும் மிகவும் பொருளாதாரம் குரைந்த மாநிலமாகவும் உள்ளது.[...] அங்கு பாலோபோ என்பது ஒரு பின்தங்கிய நகரம்; சுமார் 300 வீடுகளைக் கொண்டது; பாழடைந்த நிலையில் உள்ளது. [...] எனினும் லூவு ஒரு சக்திவாய்ந்த மாநிலமாக இருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாகவும் உள்ளது.'[7] தற்போதைய நிலை1960-களில் ககார் முசக்கார் (Kahar Muzakkar) தலைமையிலான இசுலாமிய கிளர்ச்சியின் மையமாக லூவு இருந்தது. இன்று அந்த முன்னாள் இராச்சியம் உலகின் மிகப்பெரிய நிக்கல் சுரங்கத்தின் தாயகமாக உள்ளது; மற்றும் மக்களின் இடம்பெயர்வுகளால் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவித்து வருகிறது.[8][9][8] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia