வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்)
வரகூர் ஊராட்சி (Varagur Gram Panchayat), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] மக்கள் தொகை2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 2,833 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 719 வீடுகள் உள்ளன.[7] தொழில்இங்கு பச்சைப் பசேல் வயல் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை ஆகியவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. பிற தகவல்இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 350 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவிற்குள் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி ஆகிய சமயத் தலங்கள் உள்ளன. இவ்வூரில் புகழ் பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா, தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ் பெற்றதாகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia