வல்வெட்டித்துறை நகரசபை
வல்வெட்டித்துறை நகரசபை (Valvettithurai Urban Council, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை, 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வல்வெட்டித்துறை நகரசபைக்கு 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைப் பிரதேசம் 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
தேர்தல் முடிவுகள்1983 உள்ளூராட்சித் தேர்தல்1983 மே 18 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்::[4]
1998 உள்ளூராட்சித் தேர்தல்1998 சனவரி 29 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்:[5][6]
2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்23 யூலை 2011 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[7][8]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தலைவராக கோணலிங்கம் கருணானந்தராசா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக ஆறுமுகம் ஞானேந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்6 மே 2025 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[9] 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக தவமலர் சுரேந்திரநாதன் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு), துணைத் தலைவராக நாகதம்பி பத்மநாதன் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10] இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia