பருத்தித்துறை நகரசபை
பருத்தித்துறை நகரசபை (Point Pedro Urban Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, பருத்தித்துறை நகரசபைக்கு 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைப் பிரதேசம் 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
தேர்தல் முடிவுகள்1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்18 மே 1983 இல் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]
1998 உள்ளூராட்சித் தேர்தல்கள்29 சனவரி 1998 இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[5][6]
2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்23 யூலை 2011 அன்று இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[7][8]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில் பருத்தித்துறை நகரசபையின் தலைவராக யோசேப்பு இருதயராசா (தம்புருவளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக மதினி நெல்சன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[9] 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் பருத்தித்துறை நகரசபையின் தலைவராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு), துணைத் தலைவராக தேவசிகாமணி தேவராசேந்திரன் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10] இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia