வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் வருகின்ற 16வது படலமாகும், இப்படலம் மதுரைக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது [1]

படலச் சுருக்கம்

சிவபெருமானிலிருந்து தோன்றிய வேதங்களை கற்று அதன் பொருளை உணர முடியாமல் கண்ணுவர், கருக்கர் முதலிய முனிவர்கள் வருந்தினர். அவர்களின் வருத்தினை அகற்ற அரபத்தர் எனும் முனிவர் மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கும்படி கூறினார். அதன் படி முனிவர்கள் மதுரையை அடைந்து சோமசுந்தரப் பெருமானை வழிபட்டார்கள். சிவபெருமான் குருவாக அவர்களுக்கு காட்சி தந்து வேதத்தின் பொருளை விளக்கினார்.

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/slet/l41d0/l41d0lft.jsp திருவிளையாடற் புராணம் - தமிழாய்வு தளம் பார்த்த நாள் செப்டம்பர் 16 2013
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya