தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தின் 35ஆம் படலமாகும். இப்படலம் கூடல் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் 1819 முதல் 1855 வரை எண்ணிடப்பட்ட பாடல்கள் உள்ளன [1]

கதை

இறைவனை வழிபட்டுவிட்டு நாடு திரும்பிய காடுவெட்டி சோழனுக்கு இறைவனை அடிக்கடி வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, அதற்காக இராஜேந்திர பாண்டியனோடு நட்புறவை ஏற்படுத்த எண்ணி பலவித பொருட்களையும் பாண்டிய நாட்டில் கிடைக்காத சில அரிய பொருட்களோடு சேர்த்து பாண்டிய நாட்டின் நட்பை வேண்டி ஒரு ஓலை எழுதி அமைச்சர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்தான் [2]

மகளுக்கு மணம் முடித்த சோழன்

சோழ மன்னனின் பரிசுகளை அன்புடன் ஏற்றுக் கொண்டான் இராஜேந்திர பாண்டியன், பாண்டிய நாட்டின் முத்து மாலையையும் சில அரிய பொருட்களையும் பதிலுக்கு சோழ நாட்டிக்கு அனுப்பி வைத்தான், இப்படி இரு நாடுகளுக்கும் இடையே நட்பு வளர்ந்துக் கொண்டிருந்தது, தன் மகளை பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினான் காடுவெட்டி சோழன், இதை கெடுக்க எண்ணிய பாண்டிய மன்னனின் தம்பியான இராஜசிம்மன், சோழ நாட்டிக்கு விரைந்தான் அவனை பெரும் மரியாதையோடு வரவேற்றான் சோழ மன்னன், இராஜசிம்மன் பலவாறு பேசி சோழன் மகளை தனக்கு மணம் முடிக்க ஒப்புக்கொள்ள செய்தான், பாண்டிய மன்னனுக்கு தெரியாமல் தன் நாட்டிலே வைத்து திருமணத்தை முடித்தான் சோழ மன்னன், பின் நடந்தவற்றை விளக்கி பாண்டிய நாடும் இனி எங்களுக்கே சொந்தம் எனவும் நீங்கள் நாட்டை ஒப்படைத்துவிட்டு செல்லாவிட்டால் போர் நிகழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என கூறி பாண்டிய மன்னனுக்கு ஓலை எழுதி அனுப்பினான் சோழ மன்னன், இருவரும் தக்க பாடம் புகட்ட எண்ணிய பாண்டிய மன்னன் தன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்து போருக்கு படைகளை திரட்டினான், அதற்குள் சோழ மன்னன் மதுரை எல்லையில் காத்திருந்தான் [2]

போரும் பாண்டிய மன்னனின் செயலும்

நடந்தவற்றை சொக்கநாதரிடம் கூறி வருந்திய பாண்டிய மன்னன் தன் நாட்டை காப்பது உன் பொறுப்பே என இறைவனிடம் வேண்டினான், அப்போது ஓர் அசரீரி ஒலித்தது இராஜேந்திரா! கவலைப்படாதே நாளை நீ உனது சதுரங்கப் படையுடன் சோழன் முகாமிட்டிருக்கும் மதுரை எல்லைக்குச் சென்று உன் படைகளை அவனோடு மோதவிடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றது, இதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அரண்மனைக்குச் சென்று சதுரங்கப் படையை உருவாக்கும்படி ஆணையிட்டான், மறுநாள் தானே தலைமை ஏற்று படைகளுடன் மதுரையின் எல்லைக்குச் சென்றான், அங்கு சோழப் படைகள் மலை போல் குவிந்திருந்தன, பாண்டிய மன்னன் அது பற்றி கவலைப்படவில்லை, போரில் சோழ படையை வீழ்த்திக் கொண்டு சென்றன பாண்டிய படைகள், சோழ மன்னன் பாண்டிய மன்னனின் தம்பியுடன் பாண்டிய மன்னனோடு போரிட்டான், இதற்கிடையே இறைவனின் அருளால் போரில் ஏற்பட்ட வெப்பத்தால் தாகம் எடுத்ததால் இரு படை வீரர்களும் சோர்வடைந்தனர் அங்கு எங்குமே தண்ணீர் இல்லை, இறைவன் சிவனடியார் வேடமிட்டுக் கொண்டு ஒரு தண்ணீர்ப் பந்தலை ஏற்படுத்தினார், படைகள் தண்ணீர்ப் பந்தலை நோக்கி ஓடினர், இறைவன் பாண்டிய மன்னனின் படைகளுக்கு மட்டும் நீர்மோர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தார் இதனால் சோழ படைகள் தோல்வி அடைந்தன, காடுவெட்டி சோழனும் இராஜசிம்ம பாண்டியனும் கைது செய்யப்பட்டனர், நடந்ததை நம்ப முடியாமல் இராஜேந்திர பாண்டியன் இறைவனின் அருளை எண்ணி கண்ணீர் வடித்தான், இருவரும் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர், இவர்களுக்கு தரப்போகும் தண்டனையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர், யாரும் எதிர்பாராத வண்ணம் இராஜேந்திர பாண்டியன் சோழ மன்னனிடம் காடுவெட்டி சோழனே! நீர் மண்ணாசைக் கொண்டிருந்தாலும் சிவபக்தன் என்பதால் பொன்னும் பொருளும் பரிசாகத் தருகிறோம் நீர் சோழ நாட்டிக்குச் செல்லலாம் எனவும் தன் தம்பி இராஜேந்திர பாண்டியனிடம் தம்பி! உனக்கு பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை தருகிறேன் அதன் அரசனாக நீ இருக்கலாம் எனவும் கூறி தீர்ப்பளித்தான், இருவரும் தங்களை பொறுத்தருளும்படி வேண்டினர், சோழ மன்னன் தன் மிஞ்சிய படைகளோடு நாட்டுக்குத் திரும்பினான் [2]

மேற்கோள்கள்

  1. "திருவிளையாடல் புராணம் கூடல் காண்டம் பாகம் 2". Project Madurai. Retrieved 15 May 2025.
  2. 2.0 2.1 2.2 "தண்ணீர் பந்தல் வைத்த படலம்". தினமலர். Retrieved 15 May 2025.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya