2009 வவுனியா நகரசபை தேர்தல்2009 வவுனியா நகரசபை தேர்தல் 2009 ஆகஸ்டு 8 ஆம் நாள்[1][2] நடத்தப்பட்டது. வவுனியா நகரசபைக்கு 11 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் வட மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தமுள்ள 11 இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த மிதவாதக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது[3]. 52 விழுக்காடு வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தார்கள். வவுனியா நகரசபைக்கு கடைசியாக 1994, மார்ச் 1 ஆம் நாள் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கல்இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 18 தொடக்கம் ஜூன் 25 ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன[2]. இக்கால எல்லையில்
ஆகிய குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது[1]. மொத்தம் 135 பேர் 11 இடங்களுக்காகப் போட்டியிட்டனர். முடிவுகள்இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றி முதலாவது இடத்தில் இடம்பெற்றது.
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia