2015 இந்தியன் பிரீமியர் லீக்
2015 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 8 அல்லது 2015 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், எட்டாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. எட்டாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 08, 2015 முதல் மே 24, 2015 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரையிலான நாட்களில் கொல்கத்தாவில் நகராட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அந்நாட்களில் கொல்கத்தாவில் எந்த ஆட்டமும் நடைபெறாது.[1] வீரர்களின் ஏலம்இந்தியன் பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன்படி 123 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப் பட்டனர். இவ்வாறாக தக்க வைக்கப்படாமல் அணியைவிட்டு வெளியேற்றப்படும் வீரர்கள் தங்களது பெயரை அடுத்து நடைபெறும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெங்களூருவில், பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் 2015 ஏலத்தில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் ₹ 16 கோடிக்கு ஏலம் போனார். 2014 ஐபிஎல்-இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 67 வீரர்கள் விற்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக ₹ 87,60 கோடிகள் செலவாயின.
மைதானங்கள்12 மைதாங்களில் தொடர் சுழல்முறை ஆட்டங்கள் நடைபெறும்.[2] மும்பை, பூனே மற்றும் ராஞ்சியில் முறையே தகுதியாளர்-1 விலகுபவர்-1 மற்றும் தகுதியாளர்-2 நடைபெறும். கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறும்.[3]
போட்டி அட்டவணை
புள்ளிகள் பட்டியல்
புள்ளிவிவரங்கள்அதிக ஓட்டங்கள்
அதிக விக்கெட்டுகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia