கொடுமுடி
அமைவிடம்கொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் நாமக்கல் 42 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 40 கி.மீ.; தெற்கில் கரூர் 28 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு11.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 92 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,946 வீடுகளும், 13,225 மக்கள்தொகையும் கொண்டது.[5] புவியியல்கொடுமுடி 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E[6]-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 144 மீட்டர் ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. திருப்பாண்டிக் கொடுமுடி என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. <ref> கொங்கு மண்டல சதகம், பாடல் 12, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 10 </re கோயில்கள்
பழக்க வழக்கங்கள்கொடுமுடி, காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன், வன்னி இலைகள் கொண்ட காவடியுடன், பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. புகழ்பெற்றவர்கள்
போக்குவரத்து வசதிகள்இத்தலம், ஈரோடு - கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர, புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
வான்வழிப் போக்குவரத்து
கல்வி நிறுவனங்கள்
இச்சிப்பாளையம்
க. ஒத்தக்கடை ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia