திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கைதிருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் நம்பிக்கை அறிக்கை (Apostles' Creed = இலத்தீன்: Symbolum Apostolorum அல்லது Symbolum Apostolicum) என்பது கிறித்தவ சமயத்தின் பண்டைக்காலக் கொள்கைத் தொகுப்புகளுள் ஒன்றாகும்[1]. இந்த நம்பிக்கைத் தொகுப்பு அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம் என்றும் பெயர்கொண்டுள்ளது. பல கிறித்தவ சபைகள் இந்த நம்பிக்கை அறிக்கையைத் தம் வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும், மறைக்கல்விப் பாடங்களிலும் பயன்படுத்துகின்றன. உரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க சபை, லூதரன் சபை, மேற்கு மரபுவழித் திருச்சபை, மெதடிஸ்டு சபை, மூப்பர் சபை (Presbyterianism), மக்கள் சபை (Congregational Church) போன்றவை இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்றுக்கொள்கின்றன. திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் அடித்தளம்இந்த நம்பிக்கை அறிக்கை கிறித்தவர்கள் ஏற்கின்ற திருவிவிலியத்தின் போதனைச் சுருக்கமாக உள்ளது. குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் நூல்களாகிய நற்செய்தி நூல்கள், திருமுகங்கள் என்பவற்றையும், குறைந்த அளவுக்கு பழைய ஏற்பாட்டு நூல்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கை அறிக்கை அதற்கு முற்பட்ட "உரோமை நம்பிக்கை அறிக்கை" என்னும் தொகுப்பைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. கிறித்தவ சமய வரலாற்றின் பிற்காலத்தில் (4ஆம் நூற்றாண்டு) இயேசு கிறித்துவின் மனித இயல்பு, இறை இயல்பு போன்றவை பற்றிய விவாதங்களின் தடயங்கள் இந்தப் பண்டைய நம்பிக்கை அறிக்கையில் இல்லை. இருப்பினும், கிறித்தவ சமயம் கடவுள் பற்றி எடுத்துக்கூறுகின்ற "மூவொரு கடவுள் கொள்கை" (Trinity) இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. பெயர்க் காரணம்இந்த நம்பிக்கை அறிக்கை "திருத்தூதர்களின்" ("அப்போஸ்தலர்களின்") நம்பிக்கை அறிக்கை என்று அழைக்கப்படுவதற்கு ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்த மரபுசார்ந்த ஒரு விளக்கம் உள்ளது. அதாவது, தூய ஆவியின் ஏவுதலால் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களும் ஆளுக்கு ஒரு பகுதியாக இந்த நம்பிக்கை தொகுப்பின் பன்னிரு பகுதிகளையும் அறிக்கையிட்டதாக கூறப்படுகிறது. கி.பி. 390இல் புனித அம்புரோசு என்பவர் இந்தக் கொள்கைத் தொகுப்பை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை" என்னும் பெயரால் அழைக்கின்றார். வரலாறுதிருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்னும் பெயரால் இன்று அழைக்கப்படுகின்ற இக்கொள்கைத் தொகுப்பு அதன் முழுவடிவத்தில் கி.பி. 710-714இல் புனித பிர்மீனியுஸ் எழுதிய ஒரு நூலில் தோன்றியது[2]. அதற்கு முன்னரே, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இரனேயுஸ், தெர்த்தூல்லியன், நோவாசியன், மார்செல்லுஸ், ரூஃபீனுஸ், அம்புரோசு, அகுஸ்தீன் போன்ற கிறித்த அறிஞர்களின் நூல்களில் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் தனித்தனிப் பகுதிகள் உள்ளன. திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் இலத்தீன் மூலம்உரோமன் கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் தம் வழிபாட்டில் பயன்படுத்துகின்ற இலத்தீன் மற்றும் ஆங்கில பாடங்களை இங்கே காண்க[3]: நிசேயா நம்பிக்கை அறிக்கைகத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகள் பலவும் ஏற்றுக்கொண்டு, தம் வழிபாட்டில் பயன்படுத்துகின்ற மற்றொரு பண்டைய கொள்கைத் தொகுப்பு நிசேயா நம்பிக்கை அறிக்கை (Nicene Creed) ஆகும். இது கி.பி. 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கத்தாலும், பின்னர் 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கத்தாலும் அறிக்கையிடப்பட்டதால் இப்பெயர் பெற்றது. திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையின் பழைய தமிழ்ப் பெயர்ப்புகத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நூலாகிய "திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ:
அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்புமேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:
பயன்பாடுகத்தோலிக்க திருச்சபை மரபில் பொதுவாக நிசேயா நம்பிக்கை அறிக்கை ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது அறிக்கையிடப்பட்டது. தற்போது திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையையும் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. கேள்வி-பதில் வடிவத்தில் நம்பிக்கை அறிக்கைகத்தோலிக்க திருச்சபை திருமுழுக்கு வழங்கும்போது திருமுழுக்குப் பெறுபவர் (அல்லது குழந்தையாக இருந்தால் அதன் பெற்றோர்/ஞானப்பெற்றோர் குழந்தையின் பெயரில்) தாம் கிறித்தவக் கொள்கைகளை ஏற்பதாக வாக்களிக்கும் விதத்தில் கேள்வி-பதில் வடிவில் அமைந்த நம்பிக்கை அறிக்கையும் உள்ளது. இதோ:
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia