புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[1][2] புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளாமேற்கு வங்காளம்தமிழ்நாடுஅசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
2021 மே 2 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் ந. ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 16 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
பின்னணி
மே மாதம் சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் ஆளும் கூட்டணியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறினார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசு பதவி விலகலை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.[3]
திமுக., கூட்டணியில், காங்., 15; தி.மு.க., 13; வி.சி.,1, இந்திய கம்யூ., 1 தொகுதியில் போட்டியிட்டது.[5]
புதுச்சேரியில் திமுகவுடன் அணி சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.[6]