அகமதுநகர் கோட்டை
அகமத்நகர் கோட்டை (Ahmednagar Fort), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் அகமத்நகர் அருகில் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. முதலில் இக்கோட்டை 1562 முதல் 1600 வரை அகமதுநகர் சுல்தானகத்தின் தலைமையிடமாக விளங்கியது. 1803-1805களில் மராத்திய கூட்டமைப்பு மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் இக்கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் சென்றது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இக்கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இக்கோட்டை இந்தியத் தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாறுஅகமதுநகர் சுல்தான் உசைன் நிஜாம் ஷா ஆட்சிக் காலத்தில் இக்கோட்டை 1562ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.[1]1600களில் இக்கோட்டை முகலாயர் வசம் சென்றது.[1][2][3][4] 3 மார்ச் 1707 அன்று தனது 88வது அகவையில் ஔரங்கசீப் அகமத்நகர் கோட்டையில் மரணமடைந்தார். பின்னர் 1724ல் இக்கோட்டை ஐதராபாத் நிசாம் வசம் சென்றது. பின்னர் 1756 முதல் 1803 வரை மராத்தியக் கூட்டமைப்பில் இருந்த சிந்தியா குலத்தினர் ஆண்ட குவாலியர் இராச்சிய மன்னர்களின் வசமானது. 1803-05களில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் .இக்கோட்டை பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்றது..[5]பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இக்கோட்டையை சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இந்திய விடுதலை இயக்க வீரர்களான நானா பட்னாவீஸ், ஜவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் மற்றும் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சிலராவர்[6][7] ஜவகர்லால் நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா எனும் நூலை இக்கோட்டைச் சிறையில் இருந்தபோது எழுதி முடித்தார்.[2][7][8]. தற்போது இந்தியத் தரைப்படையின் தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையை காலை 10 மணி முதல் மாலை 5 வரை பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia