ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்)
ஆரணி (ஆங்கிலம்:Arani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் சென்னையின் புறநகரில் உள்ள பேரூராட்சி ஆகும். 5.90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 210 தெருக்களும், 20,843 மக்கள் தொகையும் கொண்ட ஆரணி முதல் நிலைப் பேரூராட்சி, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] அமைவிடம்ஆரணி பேரூராட்சி, சென்னைக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவள்ளூர் நகரத்திற்கு மேற்கே 29 கி மீ தொலைவிலும், கும்மிடிப்பூண்டிக்கு வடக்கே 12 கி மீ தொலைவிலும், ஆவடிக்கு தெற்கே 27 கி மீ தொலைவிலும் உள்ளது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 13°19′46″N 80°05′09″E / 13.3295206°N 80.0857746°E.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,577 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆரணி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆரணி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia