முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த நகராட்சி ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் நகராட்சியை சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[5]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 76,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மாதவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதவரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.