கங்கார் தெப்ராவ்
கங்கார் தெப்ராவ், (மலாய்: Kangkar Tebrau; ஆங்கிலம்: Kangkar Tebrau; சீனம்: 康卡地不佬); என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், தெப்ராவ் நகரில் அமைந்து உள்ள ஒரு கிராமப் புறநகர்ப்பகுதி ஆகும். இந்தக் கிராமப்புற நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] ஜொகூர் வரலாற்றில் தெப்ராவ் எனும் பெயர் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஜொகூர் நீரிணை என்று அழைக்கப் படுவது முன்னர் காலத்தில் தெப்ராவ் நீரிணை என்று அழைக்கப்பட்டது.[2][3] வரலாறு1800-களின் முற்பகுதியில் ராஜா தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் (Raja Temenggong Tun Daeng Ibrahim) ஜொகூரை ஆட்சி செய்தபோது, தன் வருமானத்தை கடல் சார்ந்த வணிகத்தில் இருந்து நிலம் சார்ந்த வணிகமாக மாற்ற வேண்டி இருந்தது. சீன வணிகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த சீனத் தொழிலாளர்களின் உதவியுடன் அந்த மாற்றத்தைச் செய்தார்.[4] அந்த நேரத்தில், ஜொகூரில் சில கிராமங்கள் இருந்தன. அந்தக் கிராமங்கள் கடற்கரையோரம் அல்லது முக்கிய ஆறுகள் இருந்த இடங்களில் இருந்தன. அந்த ஆறுகளைப் பயன்படுத்திய சீன வணிகர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் வழங்கினார். அந்தப் பத்திரங்களுக்கு ’சூராட் சுங்கை’ (Surat Sungai) என்று பெயர்.[4] மூலிகை மிளகுத் தோட்டங்கள்அந்த அனுமதிப் பத்திரங்கள்; ஒரு நதி அல்லது துணை நதியின் கரைப் பகுதியில் உள்ள நிலங்களைத் திறக்க அனுமதிக்கும் தற்காலிக மானியங்கள் ஆகும். அனுமதிப் பத்திரங்களை வைத்து இருந்த ஒரு சீன வணிகர் "கஞ்சு" (Kangchu) என்று அறியப்பட்டார். தொடக்கக்கால விவசாய நடவடிக்கைகள் மூலிகை மற்றும் மிளகுத் தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தன. முதல் அனுமதிப் பத்திரம் 1844-இல் டான் கீ சூன் (Tan Kee Soon) என்பவருக்கு தெப்ராவ் ஆற்றைச் (Sungai Tebrau) சுற்றி இருந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் கங்கார் தெப்ராவ் (Kangkar Tebrau) என்று பெயர் பெற்றது.[4] குடியிருப்பு பகுதிகள்
கிராமப் புறங்கள்
தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிஜொகூர் பாரு மாவட்டம் (Johor Baru District) தெப்ராவ் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 386 மாணவர்கள் பயில்கிறார்கள். 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia