சகாரியா மக்கள்
![]() ![]() சகாரியா அல்லது சஹர் மக்கள் என்பவர்கள் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடிகள் ஆவார். சஹாரியா பழங்குடி மக்கள் முக்கியமாக மத்தியப் பிரதேசத்தின் முரைனா மாவட்டம், சியோப்பூர் மாவட்டம், பிண்டு மாவட்டம், குவாலியர் மாவட்டம், ததியா மாவட்டம், சிவபுரி மாவட்டம், விதிசா மாவட்டம் மற்றும் குணா மாவட்டங்கள் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் பரான் மாவட்டங்களில் காணப்படுகின்றனர். சகாரியா மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் வைத்து கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குகிறது. வரலாறுசஹாரியா பழங்குடியினரின் பழைய தலைமுறையினர் தங்கள் வரலாற்றைப் பற்றிய எந்தக் கணக்கையும் பதிவு செய்யத் தவறிவிட்டனர். மேலும் வம்சாவளியைப் பற்றிய எழுத்துப்பூர்வ பதிவுகள் நடைமுறையில் இல்லை. பாரம்பரியமாக அவர்கள் தங்கள் தொடக்கத்தை இராமாயணம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள புராணக் கதைகளில் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் இராமாயணத்தில் வரும் ஒரு பழங்குடிப் பெண்னான சபரியிலிருந்து தங்கள் குடியின் தோற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது மற்றொரு கோட்பாடு, படைப்பாளி பிரம்மா பிரபஞ்சத்தை வார்ப்பதில் மும்முரமாக இருந்தார். எல்லாரும் அமரக்கூடிய இடத்தை உருவாக்கினார். அந்த இடத்தின் மையத்தில் எளியவனாக இருந்த ஒரு சஹாரியாவை வைத்தார். மற்றவர்கள் சஹாரிய மக்களுடன் அமர்வதற்கு வந்தனர். ஆனால் சஹாரியா மக்கள் அவர்களை சதுர மையத்திலிருந்து ஒரு மூலைக்கு வெளியே தள்ளினர்.இதனால் கோபமடைந்த பிரம்மா சஹாரியா மக்களைக் கடிந்து கொண்டு, இனிமேல் காடுகளிலும், வேறு வழியில்லாத இடங்களிலும் வாழ்வதாக சஹாரியா மக்களை சபித்து ஆணையிட்டதாகவும் கதை கூறுகிறது. சில சஹாரியாக்கள் இந்துக் கடவுளான சிவனை வழிபடும் பைஜு பிலின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். வாழ்விடங்கள்சகாரியா பழங்குடிகள் முக்கிய கிராமங்களுக்கு வெளியே சஹாரானா என்று அழைக்கப்படும் பகுதிகளில் கூட்டமாக வசிக்கின்றனர். இவர்களது குடியிருப்புகள் பொதுவாக கல் பாறைகளால் செய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய தரநிலைகள் மற்றும் உள்ளூரில் படோர் என்று அழைக்கப்படும் கல் அடுக்குகளின் கூரைகளால் வகைப்படுத்தப்படுகின்றது. சில கிராமங்களில் மண் அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல் மற்றும் கான்கிரீட் மிகவும் அரிதானவை. அவர்கள் சிறிய கூட்டுக் குடும்பங்களில் வாழ்கின்றனர். மூத்த மகன்கள் திருமணத்திற்குப் பிறகு தனித்தனியாக வாழ்கிறார்கள் மற்றும் இளைய மகன் பெற்றோர் மற்றும் திருமணமாகாத சகோதரர்கள்-சகோதரிகளின் பொறுப்புகளை சுமக்கிறார்கள். சமயம்சகாரிய பழங்குடி மக்கள் நாட்டுப்புற இந்து சமயத்தின் கடவுள்கள் மற்றும் தெய்வங்களை நம்புகிறார்கள். வீர் தேஜா, தக்கர் பாபா, துர்கை, அனுமான் கடவுளர்களை வழிபாடு செய்கின்றனர். சவ்னி அமாவாசை, ஜென்மாஷ்டமி, ரக்ஷா பந்தன், தீபாவளி, ஹோலி மற்றும் தேஜா தசமி போன்ற முக்கிய நாட்களில் கடவுளை வணங்குகிறார்கள் மற்றும் கொண்டாடுகிறார்கள். திருமணம்சகாரியா பழங்குடி மக்கள் அகமண குழுவில் உள்ள அனைவரையும் சகோதர சகோதரிகளாக கருதுகின்றனர்; திருமணங்கள் தங்களின் பிற குலத்தவரிடமிருந்து நிச்சயிக்கப்படுகிறது. திருமணச் சடங்கின் போது, அவர்கள் பயபக்தியுடன் வைத்திருக்கும் காகிதத்திலும் தரையிலும் சின்னங்கள் வரையப்படுகின்றது. சில நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இருந்தாலும், குழந்தை திருமணம் விரும்பப்படுவதில்லை. மேலும் எந்த திருமணமும் 15 வயதை அடைந்த பிறகு செய்யப்படுகிறது. விதவை திருமணம் அனுமதிக்கப்படவில்லை. திருமண முறிவு பெற்ற பெண்னுக்கு மட்டுமே மீண்டும் திருமணம் செய்யும் உரிமை உள்ளது. பலதார மணம் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. சமூக வாழ்க்கைசஹாரியா சமூகம் ஒவ்வொரு வயது வந்த உறுப்பினரையும், ஒரு நாட்டாண்மை தலைமையிலான ஆளும் குழுவின் அங்கமாகக் கருதுகிறது. ஒரு நாட்டாண்மையின் நியமனம் பரம்பரை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. சபை ஒருமித்த கருத்துடன் சர்ச்சைகளை தீர்மானிக்கிறது. கற்பழிப்பு, ஓடிப்போதல் அல்லது விபச்சாரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் ஒதுக்கிவைப்பு ஆகியவற்றை இது விதிக்கிறது. கிராமங்களுக்கு இடையேயான தகராறு சோக்லா பஞ்சாயத்து என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் மற்ற மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் பேசுபவர்களால் சூழப்பட்டிருப்பதால் அவர்கள் பல்வேறு இந்தியைப் பேச்சுவழக்காகப் பேசலாம். பொருளாதாரம்சஹாரியாக்கள் நிபுணத்துவம் வாய்ந்த காடுகளை வளர்ப்பவர்கள் மற்றும் வனப் பொருட்களை சேகரிப்பவர்கள். அவர்கள் குறிப்பாக கைர் மரங்களிலிருந்து கேட்சு தயாரிப்பதில் திறமையானவர்கள். காடு, மரம், பசை, டெண்டு இலை, தேன், மஹுவா மற்றும் மருத்துவ மூலிகைகள் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்வது முக்கிய வணிகமாகும். அவர்களின் பாரம்பரிய தொழில்களில் கூடைகள் செய்தல், சுரங்கம் மற்றும் குவாரி, மற்றும் கற்களை உடைத்தல் ஆகியவை அடங்கும். இவர்கள் காடுகளில் வேட்டையாடுகிறார்கள் மற்றும் ஆறுகளில் மீன் பிடிக்கிறார்கள். சமவெளிகளில் குடியேறிய பழங்குடி சஹாரியா மக்கள் வயல்வெளிகளில் கோதுமை, திணை, நிலக்கடலை மற்றும் சோளம் வேளாண்மை செய்கிறார்கள். உடல் நலம்சகாரியா பழங்குடியின மக்களின் பொதுவான சுகாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் காசநோய் பரவலாக உள்ளது. குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜீனோமிக்ஸ் மையம், அவர்களின் நோய்களுக்கான மரபணு மற்றும் மரபணு அல்லாத அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய தீவிர மருத்துவ மற்றும் மரபணு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிடத்தக்க சகாரியா பழங்குடி மக்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia